ஜம்மு: நாட்டுக்காகப் போராடும் ராணுவ வீரர்களிடையே மத வேறுபாடு பார்ப்பதில்லை என்று ஹைதராபாத் எம்.பியின் விமர்சனத்திற்கு ராணுவ வட பிராந்திய தலைமை அதிகாரி தேவராஜ் அன்பு ஆவேச பதில் அளித்துள்ளார்.
ஐ.எம்.ஐ.எம். கட்சி ஹைதராபாத் எம்.பியான அசாதுதீன் ஒவைசி செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் நாட்டுப்பற்றை பற்றிக் கேள்வி எழுப்புபவர்கள், சமீபத்திய சஞ்சுவன் ராணுவ முகாம் தாக்குதலில் உயிரிழந்த இஸ்லாமிய ராணுவ வீரகள் பற்றி பேசாமல் அமைதியாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்திய படையணிகளின் பொதுத் தலைமை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனெரல் தேவராஜ் அன்பு, ஜம்முவில் புதனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
ராணுவத்தில் நாங்கள் எந்த விதமான மத பேதமும் பார்ப்பது கிடையாது. அவ்வாறு பேசுபவர்கள் ராணுவத்தின் செயல்பாடுகளை முழுமையாக அறியாதவர்கள்.
ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் தொடர்ந்து தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்து வருவது கவனம் செலுத்த வேண்டிய ஒரு விஷயமாகும்.
தற்சமயம் இலைகர்களிடம் பிரிவினைவாத மனப்பான்மையைத் தூண்டுவதில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோடை கால தீ தடுப்பு நடவடிக்கைகள்: மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்

மே 11 முதல் மக்கள் குறைதீா் கூட்டம்: சென்னை ஆட்சியா்

ரயில்வே புதிய முதன்மை தலைமை பணியாளா் அதிகாரி பொறுப்பேற்பு

தில்லி கோயில், ராணுவ முகாமில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ தொடா்புடைய கும்பல் திட்டம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

