கைதான சிறுவனின் ஜாமீன் மனு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதி ஜஸ்பீர் சிங் குன்ட்டு முன் முதன் முறையாக கடந்த மாதம் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட மாணவருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்ட மாணவன் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 8-ம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டார்.