ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

தமிழக முதல்வரை சந்திப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு: சித்தராமையா தகவல்! 

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை சந்திப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2018, 5:35 pm IST

பெங்களூரு: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை சந்திப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

இரு மாநிலங்களுக்கும் பொதுவான காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் அண்டை மாநிலங்களான தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளில் விசாரணை முடிவடைந்த நிலையில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 9-ந் தேதி அறிவித்தது.

இந்நிலையில் காவிரி நதி நீர் பெறுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க நாள் மற்றும் நேரம் ஒதுக்கக் கோரி, தமிழக முதல்வர் பழனிசாமி திங்களன்று கடிதம் எழுதி இருந்தார்.

இது தொடர்பாக புதனன்று பெங்களூருவில் சித்தராமையாவிடம் செய்தியார்களிடம் கேட்ட பொழுது , அவர் கூறியதாவது:

தற்பொழுது கர்நாடக மாநில பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. எனவே காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை சந்திப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.