47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜம்மு-காஷ்மீரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், திங்கட்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் வேட்டையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

News image
Updated On :9 ஜூலை 2018, 3:58 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், திங்கட்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் வேட்டையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இது குறித்து ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கூறியதாவது:

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்திலுள்ள ஹந்த்வாரா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பாதுகாப்புப் படையினா் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

இதில் திங்கட்கிழமை அதிகாலை வரை, அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். மேலும் தேடுதல் வேட்டை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.