இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தேசிய பசுமைத் தீர்ப்பாய தலைவராக நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் பதவியேற்பு

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தலைவராக நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் திங்கள்கிழமை பதவியேற்றார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 7:44 pm

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தலைவராக நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் திங்கள்கிழமை பதவியேற்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனங்கள் மற்றும் இதர வளங்களை பாதுகாப்பது தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 2010-இல் உருவாக்கப்பட்டது. அதன் முதன்மை அமர்வு, தில்லியில் செயல்படுகிறது. மண்டல அமர்வுகள் போபால், புணே, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் செயல்படுகின்றன.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதல் தலைவராக நீதிபதி லோகேஷ்வர் சிங் பொறுப்பேற்றார். அவர், கடந்த 2011-இல் ஹிமாசலப் பிரதேச லோக் ஆயுக்த தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, பசுமைத் தீர்ப்பாய தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, தீர்ப்பாய தலைவராக பதவியேற்ற ஸ்வதந்தர் குமார், 5 ஆண்டு பணிக் காலத்தை நிறைவு செய்து, கடந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்றார். அதன்பின், நீதிபதிகள் உமேஷ் தத்தாத்ரேய சால்வி, ஜாவத் ரஹீம் ஆகியோர் பொறுப்பு தலைவர்களாக அடுத்தடுத்து நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து கடந்த 6-ஆம் தேதி ஓய்வு பெற்றவரான இவர், பசுமைத் தீர்ப்பாய தலைவராக திங்கள்கிழமை பதவியேற்றார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இப்பதவியை கோயல் வகிப்பார். காற்று மாசு பிரச்னை, கங்கை, யமுனை நதிகளை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் பசுமைத் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.