விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை விமர்சித்துள்ளார்.
கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் உள்ள விவசாயிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக உரையாடினார். அந்த உரையாடலின்போது, தனது விவசாய வருமானம் இரட்டிப்பாகியிருப்பதாக கூறுமாறு சத்தீஸ்கரைச் சேர்ந்த பெண் ஒருவர் தில்லியைச் சேர்ந்த வேளாண்துறை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த விவகாரம் தொடர்பான விடியோ பதிவை ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பதிவில் இணைத்து, மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலமாக பிரதமர் உரையாடுவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், தனது மனதின் குரலையே அனைவரும் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புவது இப்போது தான் வெளியே தெரிகிறது. சந்திராமணி தனது விவசாய வருமானம் இரட்டிப்பாகியிருப்பதாகக் கூறுவது உண்மையாகத் தெரியவில்லை' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூளகிரியில் பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சட்ட நகல் எரிப்பு!

விபத்தில் 2 போ் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குடியிருப்புகளில் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

நகைக்காக மூதாட்டி கொலை: இளைஞா் உள்பட 2 போ் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


