வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

விவசாயிகள் வருமானம்: மோடி மீது ராகுல் தாக்கு

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை விமர்சித்துள்ளார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 7:25 pm

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை விமர்சித்துள்ளார்.
கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் உள்ள விவசாயிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக உரையாடினார். அந்த உரையாடலின்போது, தனது விவசாய வருமானம் இரட்டிப்பாகியிருப்பதாக கூறுமாறு சத்தீஸ்கரைச் சேர்ந்த பெண் ஒருவர் தில்லியைச் சேர்ந்த வேளாண்துறை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
அந்த விவகாரம் தொடர்பான விடியோ பதிவை ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பதிவில் இணைத்து, மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலமாக பிரதமர் உரையாடுவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், தனது மனதின் குரலையே அனைவரும் கேட்க வேண்டும் என்று அவர் விரும்புவது இப்போது தான் வெளியே தெரிகிறது. சந்திராமணி தனது விவசாய வருமானம் இரட்டிப்பாகியிருப்பதாகக் கூறுவது உண்மையாகத் தெரியவில்லை' என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.