தில்லியில் அரசு மூலம் குறைந்த விலையில் நிலம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தில்லியில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளுக்கு தில்லி அரசு குறைந்த விலையில் நிலங்களை வழங்கியுள்ளது. இதன்படி, குறைந்த விலையில் நிலங்களை பெற்று அந்த இடத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகள், சமூகத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மொத்த வெளி நோயாளிகளின் எண்ணிக்கையில் 25 சதவீத பேருக்கும், உள் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் 10 சதவீத பேருக்கும் அந்த குறிப்பிட்ட மருத்துவமனைகள் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த தீர்ப்பை எதிர்த்தால் குறிப்பிட்ட மருத்துவமனையின் ஒப்பந்தம் ரத்து செய்யபட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து தில்லி அரசு உச்சநீதிமன்றத்திடம் குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூர்யாவின் கருப்பு பட தெலுங்கு டைட்டில் அறிவிப்பு!
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |

கேமரூன் கிரீன் பந்துவீசவில்லையென்றால் கேகேஆர் என்ன செய்ய வேண்டும்?

உ.பி.யில் பள்ளி அருகே புகைமூட்டம்: 26 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி!
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


