நவாஸ் ஷெரீஃப் கைதுக்கு அவருடைய நண்பர் பிரதமர் மோடியின் கருத்து என்ன? ட்விட்டரில் காங்கிரஸ் கேள்வி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அவருடைய நண்பர் மோடியின் கருத்து என்ன என்று காங்கிரஸ் ட்விட்டரில் சனிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
நவாஸ் ஷெரீஃப் கைதுக்கு அவருடைய நண்பர் பிரதமர் மோடியின் கருத்து என்ன? ட்விட்டரில் காங்கிரஸ் கேள்வி
Updated on
1 min read

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அவருடைய நண்பர் மோடியின் கருத்து என்ன என்று காங்கிரஸ் ட்விட்டரில் சனிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவும், இருநாடுகளின் உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் சென்றிருந்தார். மேலும் ஷெரீஃப்-இன் பேத்தி திருமண நிச்சயத்திலும் கலந்துகொண்டார். இதுவே மோடியின் முதல் பாகிஸ்தான் பயணமாகும்.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டி சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனர். இதுகுறித்து நவாஸ் ஷெரீஃப்-இன் நண்பர், பிரதமர் மோடியின் கருத்து என்ன என்று காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com