முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சபரிமலையில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: கேரள உயர் நீதிமன்றம்

சபரிமலையில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2018, 12:53 pm IST

சபரிமலையில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. 
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அதிக அளவில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவதே காரணம் என்றும் தகவல்கள் வெளியாகின.
இதை அடிப்படையாகக் கொண்டு, கேரள உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை மேற்கொண்டது. இந்த வழக்கில், கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். ராமச்சந்திர மேனன், தேவன் ராமச்சந்திரன் ஆகியோரைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச் தனது உத்தரவை திங்கள்கிழமை வெளியிட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
சபரிமலை ஐயப்பன் கோயில் தலைமை பூசாரியால் தெரிவிக்கப்பட்டுள்ள மக்கும் தன்மைகொண்ட பொருள்களை மட்டுமே, கோயிலுக்கு இருமுடி கட்டிக் கொண்டு வரும் பக்தர்கள் கொண்டு வர வேண்டும். பிளாஸ்டிக் பொருள்கள் எதையும் கொண்டு வரக் கூடாது. கோயில் மற்றும் கோயில் வளாகங்கள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்த தகவலை, வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தெரியப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் மத்தியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு பக்தர்கள் வரும்போது தாங்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டில்கள், துணிகள் உள்ளிட்டவற்றை வீசி செல்வதாகவும், இதனால் சபரிமலையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.