டிராய் தலைவரின் தகவல்கள் ஆதார் மூலம் பெறப்பட்டது என்பது பொய் - ஆதார் ஆணையம்

டிராய் தலைவரின் தகவல்கள் பொது தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டது, ஆதார் மூலம் பெறப்பட்டது என்பது பொய் என ஆதார் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
டிராய் தலைவரின் தகவல்கள் ஆதார் மூலம் பெறப்பட்டது என்பது பொய் - ஆதார் ஆணையம்

டிராய் தலைவரின் தகவல்கள் பொது தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டது, ஆதார் மூலம் பெறப்பட்டது என்பது பொய் என ஆதார் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

சுட்டுரை சமூகவலைதளத்தில் ஆதார் விவரத்தை வெளியிட்டு, அதை எவ்வாறு தவறாக பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டும்படி சமூகவலைதள பயன்பாட்டாளர்களுக்கு இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவர் ஆர்.எஸ். ஷர்மா சனிக்கிழமை சவால் விடுத்தார்.

இந்த சவாலை ஏற்று ஷர்மாவின் தகவல்களை வெளியிட்டு சவாலை ஹேக்கர்கள் முறியடித்தனர். இதையடுத்து, ஆதார் குறித்தான சர்ச்சை விவாதத்துக்குள்ளானது. 

இந்நிலையில், ஷர்மா குறித்தான தகவல்கள் ஆதார் மூலம் பெறப்பட்டது என்பது பொய் என மறுப்பு தெரிவித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் ஆதார் ஆணையம்,

"ஷர்மாவின் தகவல்கள் ஆதார் தரவுகளில் இருந்து சேகரிக்கப்படவில்லை. ஷர்மா சமூகத்தில் பிரபலமானவர் என்பதால் அவருடைய முகவரி, பிறந்த தினம், செல்லிடப் பேசி எண், இமெயில் உள்ளிட்ட தகவல்கள் பொது தளங்களிலேயே உள்ளது. அதில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் தான் அது. 

இதுபோன்ற தவறான செய்திகளால் மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. ஆதார் தரவுதளம் பாதுகாப்பாக உள்ளது. விளம்பரங்களுக்காக ஆதார் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர்.     

இது வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்துக்கும், தனிப்பட்ட தகவல் பாதுகாப்புக்கும் இடையிலான சவாலாகும். இந்த சவால், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி பரிந்துரைக்கும் பரிந்துரைகள் மூலம் சரிசெய்யப்படும்" என்று குறிப்பிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com