திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

அக்னி-5 ஏவுகணை இன்று வெற்றிகரச் சோதனை

ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி-5 ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 

News image
Updated On :3 ஜூன் 2018, 7:23 am

ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி-5 ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இன்று காலை சரியாக 9.48 மணியளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்டது. இதில் ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்டதாகும். சராசரியாக 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கக் கூடியது.

இந்திய பாதுகாப்புத்துறையில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அக்னி-5 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று துல்லியமாகத் தாக்கக்கூடிய வகையில் அக்னி-6 ஏவுகணையை தயாரிக்கும் பணியில் டிஆர்டிஓ ஈடுபட்டுள்ளது.

தற்போது இந்தியாவிடம் அக்னி-1 (700 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கக்கூடியது), அக்னி-2 (2 ஆயிரம் கிலோ மீட்டர்), அக்னி-3 மற்றும் 4 (3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர்) அக்னி-5 (5 ஆயிரம் கிலோ மீட்டர்) மற்றும் சூப்பர்ஸானிக் பிரம்மோஸ் ரக ஏவுகணைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.