அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாஜக அரசு குரைக்கும் அரசு, எதுவும் செய்யாது - மல்லிகார்ஜூன் கார்கே சாடல்

பாஜக பேச்சில் மட்டும் தான் உள்ளது, செயல்பாட்டில் ஒன்றும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:13 pm

DIN

விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும், வேளாண் விளை பொருள்களுக்கு சரியான விலை நிர்ணயிக்க வேண்டும் மற்றும் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாடு முழுவதும் 10 நாள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டமானது கடந்த வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே இதுகுறித்து பேசுகையில்,

"காங்கிரஸ் ஆட்சியிலும், பாஜக ஆட்சியிலும் உள்ள கடன் தள்ளுபடியை ஒப்பிட வேண்டும். நாங்கள் விளம்பரத்தில் ஒரு போதும் ஈடுபட்டதே கிடையாது. எங்களது பணியை செய்துவிட்டு அமைதியாக இருப்போம். 

அதனால் தான் என்னவோ எங்களை அமைதியாக இருக்கிறோம், மியூட் ஆக இருக்கிறோம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். தற்போதைய அரசு குரைக்கும் அரசு, ஆனால் ஏதும் செய்யாது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.