ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ஐடிபிஐ வங்கி தலைவர் நியமனம்
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ஐடிபிஐ வங்கியின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மகேஷ் குமார் ஜெயின் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.


ரிசர்வ் வங்கியின் தலைவராக உர்ஜித் படலே செயல்பட்டு வருகிறார். அவருக்கு கீழ் ஏற்கனவே 3 துணை ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். தற்போது, 4-ஆவது துணை ஆளுநராக ஐடிபிஐ வங்கியின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மகேஷ் குமார் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது.
மகேஷ் குமார் ஜெயினுக்கு வங்கி நிர்வாகத்தில் 30 ஆண்டுகால அனுபவம் உள்ளது.
இந்த தகவலை நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...