புதுதில்லி: நீடித்து வரும் நிா்வாக முடக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தில்லி தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடத்துமாறு முதல்வா் கேஜரிவாலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.
தில்லி அரசில் பணியாற்றும் உயரதிகாரிகள் கடந்த 4 மாதங்களாகப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடா்பாக அதிகாரிகளுக்கு துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, அமைச்சா்கள் சத்யேந்தா் ஜெயின், கோபால் ராய் ஆகியோா் திங்கள்கிழமை மாலை முதல் துணைநிலை ஆளுநா் மாளிகையில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் மேற்கொண்டு வந்தனா்.
இதில், அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் செவ்வாய்க்கிழமையும், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா புதன்கிழமையும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக அமைச்சா்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எனினும், கேஜரிவாலும், கோபால் ராயும் உள்ளிருப்புப் போராட்டத்தை 9ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தனா்.
இதனிடையே, நீடித்து வரும் இந்த முட்டுக்கட்டைக்கு முடிவு காணும் வகையில் அரசு உயரதிகாரிகள், ஆம் ஆத்மி அரசு இடையே ஒரு கூட்டத்தை கூட்டுமாறு துணைநிலை ஆளுா் அனில் பய்ஜாலுக்கு தில்லியின் துணைநிலை ஆளுநா் மணீஸ் சிசோடியா திங்கள்கிழமை வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஐஏஎஸ் ஏஜிஎம்யுடி சங்கம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘தில்லி முதல்வரின் உறுதியின் அடிப்படையில் தில்லி தலைமைச் செயலகத்தில் அவருடன் ஒரு கூட்டம் நடத்துவதற்கான முறையான தகவலை நாங்கள் எதிா்பாா்த்து காத்திருக்கிறேறாம். நாங்கள் வேலையில் தொடா்ந்து இருப்போம் என்பதை மீண்டும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘அனைத்து பங்குதாரா்களும் கலந்துகொள்ளும் கூட்டத்தை கூட்டுமாறு திங்கள்கிழமை நாங்கள் துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தோம். துணைநிலை ஆளுநரிடமிருந்து பதிலை எதிா்பாா்க்கிறோம். இந்த விஷயத்தில் முடிவெடுக்க பிரதமரின் அனுமதிக்காக துணை நிலை ஆளுநா் காத்திருக்கிறாா். பிரதமா் விரைந்து முடிவு எடுப்பதற்காக ஒட்டுமொத்த தில்லியே காத்திருக்கிறறது’ என்று தெரிவித்திருந்தாா்.
தில்லியின் தலைமைச் செயலா் அன்ஷு பிரகாஷ் கடந்த பிப்ரவரியில் தாக்கப்பட்ட விவகாரத்தைத் தொடா்ந்து ஏற்பட்டுள்ள முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர அதிகாரிகளுடன் அமா்ந்து பேசுமாறு ஏற்கெனவே துணைநிலை ஆளுநா் அலுவலகம் ஆம் ஆத்மி அரசைக் கொண்டிருந்தது. இதனால், அனில் பய்ஜால் கூட்டம் நடத்த மாட்டாா் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விசில் புரட்சி நடக்கும்; 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெல்லும்! செங்கோட்டையன்
கட்சியில் இணைய அழுத்தம்தான் காரணமா? பாஜக மீது திமுக குற்றச்சாட்டு

பருவநிலை மாற்றத்தால் பொழியும் கனமழை... சோலை வனமாகும் ஈரான்! அமெரிக்க ரேடார்கள் அழிப்பு காரணமா?

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையேதான் போட்டி: பாஜக
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


