

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய தலைமை செயலராக பி.வி.ஆர்.சுப்ரமணியம், சனிக்கிழமை பதவியேற்றார்.
ஜம்மு-காஷ்மீரில் பிடிபி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. இதனால் மெஹபூபா முஃப்தி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் புதிய தலைமை செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம், சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். கடந்த 1987-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இவர், கடந்த 2004 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்-இன் தனிச் செயலராக செயல்பட்டுள்ளார்.
இதுவரை ஜம்மு-காஷ்மீர் தலைமை செயலராக செயல்பட்டு வந்த பி.பி.வியாஸ், அம்மாநில ஆளுநர் வோஹ்ரா-வின் தனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் கூட ஆளுநரின் தனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.