லாலு பிரசாத் யாதவ் ஜாமீன் நீட்டிப்பு - உயர் நீதிமன்றம் 

லாலு பிரசாத்தின் ஜாமீனை 3 வார காலத்துக்கு நீட்டித்து ராஞ்சி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்துக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ராஞ்சி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

முன்னதாக, லாலுவின் உடல் நிலை மற்றும் பெற வேண்டிய மருத்துவச் சிகிச்சைகளின் அடிப்படையில் அவருக்கு கடந்த மே 11-ஆம் தேதி, ஒன்றரை மாதம் ஜாமீன் அளிக்கப்பட்டது. இந்த ஜாமீன் கடந்த 27-ஆம் தேதி நிறைவடைய இருந்ததை அடுத்து, ஜாமீன் நீட்டிப்பு கோரி அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை கடந்த 22-ஆம் தேதி விசாரித்த நீதிபதி, ஜூலை 3-ஆம் தேதி வரை லாலுவின் ஜாமீனை நீட்டித்தார். மேலும், இந்த வழக்கை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி, இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது லாலு பிரசாத்தின் வழக்கறிஞர் பிரபாத் குமார் லாலு பிரசாத்தின் ஜாமீனை மேலும் நீட்டிக்கும்படி புதிய மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து, லாலு பிரசாத்தின் ஜாமீனை மேலும் 3 வார காலம் நீட்டித்து ராஞ்சி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது, அவருக்கு தற்போது ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

வழக்கு விவரம்:  

பல கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான 3 வழக்குகளில் லாலு குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, அவர் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையடுத்து, தான் சிறப்பு சிகிச்சை பெற 3 மாத காலம் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு சார்பில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அவருக்கு ஒன்றரை மாதம் மட்டுமே ஜாமீன் கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com