ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ராணுவத்துக்கு எதிராக கருத்து? குலாம் நபி ஆசாத் மீது தேச துரோக புகார்

காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மீது தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தேச துரோக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :29 ஜூன் 2018, 12:04 pm

DIN

காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ராணுவத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக தில்லி பட்டியாலா நீதிமன்றத்தில் குற்றவியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை வழக்கறிஞர் சசி பூஷண் அளித்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவின்படி, குலாம் நபி ஆசாத் மீது இந்திய குற்றவியல் பிரிவு 124 (தேச துரோகம்), 120பி (குற்றவியல் சதித்திட்டம்) மற்றும் 505(1) (ராணுவம்/கடற்படை/விமானப்படை அதிகாரி குறித்து வதந்திகளை பரப்பி கலகத்தை உண்டாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த வழக்கு நாளை (சனிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. 

வழக்கறிஞர் அளித்த புகாரின்படி, ஜூன் 22-ஆம் தேதி குலாம் நபி ஆசாத், 'காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல் நடவடிக்கைகளில் பயங்கரவாதிகளைவிட நிறைய அப்பாவி மக்களையே ராணுவம் கொலை செய்கிறது' என்று கூறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.