ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் அரசு மருத்துவமனை தாக்குதலில் போலீசிடம் இருந்து தப்பிய லஷ்கர் தீவிரவாதி நாவீத், தற்பொழுது ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன் நாவீத். ஜம்மு போலீசார் பிடியில் இருந்த இவன், கடந்த 6-ஆம் தேதி ஸ்ரீநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டன.
அப்பொழுது அங்கு திடீரென்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி, நாவீத்தை தப்பிக்க வைத்தனர். அவனைப் பிடிக்க போலீசார் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வெற்றியடையவில்லை.
இந்நிலையில் ஸ்ரீநகர் அரசு மருத்துவமனை தாக்குதலில் போலீசிடம் இருந்து தப்பிய லஷ்கர் தீவிரவாதி நாவீத், தற்பொழுது ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிற ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் வனப்பகுதி ஒன்றில் அவன் இருக்கும் விடியோ ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் கையில் மோட்டார் துப்பாக்கி ஒன்றை வைத்துக் கொண்டிருக்கும் நாவீத், பிற ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் சிரித்துப் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த விடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அதுவரை இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க இயலாது என்றும் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமமுக பெயரில் ஆளுநரிடம் போலி கடிதம்: காவல் நிலையத்தில் டி.டி.வி.தினகரன் புகாா்

ஈரோடு மாவட்டத்தில் 4-ஆவது நாளாக கனமழை
போலி கைப்பேசிகளை விற்று பணம் மோசடி: மகாராஷ்டிர தம்பதி உள்பட 4 போ் கைது

இன்று குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

