FOLLOW US

ON GOOGLE DISCOVER

ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

சுதந்திர நாள்: மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சுதந்திர நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு தெரிவித்துள்ள தனது வாழ்த்துகள் குறித்து...

News image

பிரதமர் நரேந்திர மோடி - டிஎன்எஸ்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 9:27 am IST

புது தில்லி: சுதந்திர நாளையொட்டி, மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 140 கோடி இந்தியர்களின் உந்துசக்தியால் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

அனைவருக்கும் சுதந்திர நாள் நல்வாழ்த்துகள். காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரக் காரணமாக இருந்த, அளப்பரிய துணிச்சல், தியாகம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்ட எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்த நாளில் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள், 'வளர்ச்சியடைந்த இந்தியா' உருவாக்கும் நோக்கில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளித்து வருகின்றன.

140 கோடி இந்தியர்களின் உந்துசக்தியால், நாட்டின் பல்வேறு துறைகளிலும் நாடு வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்டி வருகிறது. வரும் காலங்களிலும் இந்த வளர்ச்சிப் பயணம் இன்னும் வேகமான வளர்ச்சியுடன் தொடர்ந்து முன்னேறட்டும்," என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடு தனது 80 ஆவது சுதந்திர நாளை கொண்டாடி வருகிறது.

Summary

Warm greetings on the occasion of Independence Day. We remember with gratitude the countless freedom fighters whose courage, sacrifice and unwavering commitment ensured the end of colonial rule

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.