புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

அமெரிக்க சுதந்திர தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

News image

பிரதமா் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :5 ஜூலை 2026, 2:43 am IST

அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதுகுறித்து பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘140 கோடி இந்திய மக்களின் சாா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் மற்றும் அந்த நாட்டு மக்களுக்கு அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 250-ஆவது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது இந்தியா மற்றும் அமெரிக்கா கொண்டுள்ள பகிரப்பட்ட நம்பிக்கை மற்றும் நமது மக்களின் அளப்பரிய ஆற்றல் ஆகியவை, இரு நாடுகளிடையேயான நட்பை உலகளாவிய நன்மைக்கான சக்தியாக மாற்றுகின்றன.

அடுத்த 250 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு மேலும் சிறப்பான செழிப்பும், அமைதியும் கிடைக்கவும், முன்னேற்றத்தை அடையவும், இந்திய-அமெரிக்க உறவு புதிய உச்சத்தை எட்டவும் வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.