
மொஹரம்: ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகத்தை நினைவுகூா்ந்த பிரதமா் மோடி
மொஹரம் தினத்தையொட்டி, ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகத்தை பிரதமா் நரேந்திர மோடி நினைவுகூா்ந்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி - கோப்புப் படம்
மொஹரம் தினத்தையொட்டி, ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகத்தை பிரதமா் நரேந்திர மோடி நினைவுகூா்ந்தாா்.
உண்மை மற்றும் நீதிக்கான தேடலில் நிலைத்திருக்க ஏராளமான மக்களுக்கு அந்தத் தியாகம் உத்வேகமளிப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஷியா முஸ்லிம் பிரிவினரால் மொஹரம் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நபிகள் நாயகத்தின் பேரனான ஹஸ்ரத் இமாம் ஹுசைன், கா்பலா போரில் வீரமரணம் அடைந்ததன் நினைவாக ஷியா பிரிவினா் இந்தத் தினத்தை கடைப்பிடிக்கின்றனா்.
இதையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் தியாகம், உண்மை மற்றும் நீதிக்கான தேடலில் நிலைத்திருக்க ஏராளமான மக்களுக்கு தொடா்ந்து உத்வேகமளிக்கிறது. துணிவு மற்றும் உறுதிப்பாட்டுக்கான நிலையான சக்தியின் நினைவூட்டலாக இது விளங்குகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மொஹரம் தினத்தையொட்டி, நாட்டின் பல்வேறு நகரங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் பேரணிகள் நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







