சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விரைவில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரே கட்சியின் ஆட்சி: உற்சாகத்தில் உத்தரப்பிரதே முதல்வர்! 

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரே கட்சியின் ஆட்சி மலரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று மூன்று மாநில தேர்தல் வெற்றி குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:23 pm

DIN

லக்னௌ: காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரே கட்சியின் ஆட்சி மலரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று மூன்று மாநில தேர்தல் வெற்றி குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்களில் பாரதிய ஜனதா காட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதுகுறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  செய்தியாளர்களிடம் பேசினார்.  அவர் பேசும்பொழுது கூறியதாவது:

மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பிரதமரின் கொள்கைகளே காரணம்.

நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் பாஜகவின் நிலையான செயல்பாடு மக்களின் வளர்ச்சிக்கான நோக்கங்களை நிறைவேற்றும் ஒரு நீண்ட வழியில் செல்லும்.

நாடு சுதந்திரம் அடைந்தபின்னர் இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக வடகிழக்கு மாநிலங்கள் தேசிய மைய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பு பெற்றுள்ளன. இனி அவை முன்னேற்றத்திற்கான பலன்களையும் பெறும்.

பிரதமர் மோடியின் வளர்ச்சி சார்ந்த கொள்கைகள் மற்றும் தேசிய தலைவர் அமித் ஷாவின் வழிகாட்டுதல்களுடன் இனி கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் தாமரை மலரும்.  இதற்காக அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.

விரைவில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரே கட்சியின் ஆட்சி வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.