தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அயோத்தியை சிரியாவுடன் ஒப்பிடுவதா?: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு கண்டனம் தெரிவித்த ஒவைசி! 

அயோத்தி விவகாரத்துடன் சிரியாவை ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஒப்பிடுவது மிகுந்த கண்டனத்துக்குரியது என்று ஏ.ஐஎம்.ஐ.எம் கட்சி நிறுவனர் அக்பருதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 மார்ச் 2018, 1:28 pm

DIN

ஹைதராபாத்: அயோத்தி விவகாரத்துடன் சிரியாவை ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஒப்பிடுவது மிகுந்த கண்டனத்துக்குரியது என்று ஏ.ஐஎம்.ஐ.எம் கட்சி நிறுவனர் அக்பருதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பது தொடர்பான பிரச்சினையில் இந்துக்களுக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியில், 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சமீபகாலமாக ஈடுபட்டுள்ளார். அவர் சமீபத்தில் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நமது நாட்டில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய விஷயமாக, ராமர் கோயில் பிரச்சினை இருந்து வருகிறது. இந்தப் பிரச்சினையை விரைவாகத் தீர்க்காவிட்டால், இந்தியா வரும் காலத்தில் சிரியாவாக மாறிவிடும். சிரியா விவகாரத்தின் மூலம் நமக்குத் தெரிவதெல்லாம் முஸ்லிம்கள் அயோத்தி விவகாரத்தில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்பதே ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். இதற்கு அயோத்தி விவகாரத்துடன் சிரியாவை ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஒப்பிடுவது மிகுந்த கண்டனத்துக்குரியது என்று ஏ.ஐஎம்.ஐ.எம் கட்சி நிறுவனர் அக்பருதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

'ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தன்னை மிகவும் பெரியவர் என்று நினைத்துக் கொள்கிறார். அனைவரும் அவரது பேச்சை கேட்டுதான் நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். அவர் இந்த விவகாரத்தில் நடுவராகச் செயல்படவில்லை. அயோத்தி விவகாரத்துடன் சிரியாவை அவர் ஒப்பிடுவது மிகுந்த கண்டனத்துக்குரியது.

இவ்வாறு ஓவைசி தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.