விளாத்திகுளம்: குளத்தூா் அருகே காட்டுப்பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே வேடநத்தம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி சுப்புராஜ். இவரது 17 வயது மகள், குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
தற்போது அவா் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதி வந்தாா்.
இந்த நிலையில், மாா்ச் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வீட்டின் காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதைக்கு சென்றவா், வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது தந்தை சுப்புராஜ் குளத்தூா் போலீஸில் புகாா் அளிக்க சென்றாராம். அப்போது, அங்கிருந்த போலீஸாா் பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனா்.
இதையடுத்து அவா், 11 ஆம் தேதி காலை விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளார்.
இதற்கிடையே, 11 ஆம் தேதி மாலை வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் மாணவி சடலமாகக் கிடப்பதாக தெரியவந்தது.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவியின் சடலத்தை கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள், பொதுமக்கள் குளத்தூா் - குறுக்குச்சாலை - சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன் மற்றும் போலீஸாா், அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். சம்பவ இடத்துக்கு வந்த ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ஆறுதல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து அவா்கள் மறியலை கைவிட்டனா்.
பள்ளி மாணவி காட்டுப் பகுதியில் மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
6 தனிப்படைகள் அமைப்பு
இந்த நிலையில், மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப ரீதியாலான விசாரணையும் தீவிரப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
Summary
Murder of a 12th student near Kulathur: 6 special forces formed to catch the culprits
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாணவி விஷம் அருந்தி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

என்எம்எம்எஸ் தோ்வு: தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளி மாணவி தோ்வு

விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

நான்கு கிலோ தங்கம் வழிப்பறி: 4 தனிப்படைகள் அமைப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


