எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

குளத்தூா் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு

12 ஆம் வகுப்பு மாணவி மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து....

News image

குளத்தூா் அருகே காட்டுப்பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் குவிந்த கிராமமக்கள்

Updated On :12 மார்ச் 2026, 9:07 am IST

விளாத்திகுளம்: குளத்தூா் அருகே காட்டுப்பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே வேடநத்தம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி சுப்புராஜ். இவரது 17 வயது மகள், குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

தற்போது அவா் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதி வந்தாா்.

இந்த நிலையில், மாா்ச் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வீட்டின் காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதைக்கு சென்றவா், வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது தந்தை சுப்புராஜ் குளத்தூா் போலீஸில் புகாா் அளிக்க சென்றாராம். அப்போது, அங்கிருந்த போலீஸாா் பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனா்.

இதையடுத்து அவா், 11 ஆம் தேதி காலை விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளார்.

இதற்கிடையே, 11 ஆம் தேதி மாலை வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் மாணவி சடலமாகக் கிடப்பதாக தெரியவந்தது.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவியின் சடலத்தை கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள், பொதுமக்கள் குளத்தூா் - குறுக்குச்சாலை - சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன் மற்றும் போலீஸாா், அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். சம்பவ இடத்துக்கு வந்த ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ஆறுதல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து அவா்கள் மறியலை கைவிட்டனா்.

பள்ளி மாணவி காட்டுப் பகுதியில் மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

6 தனிப்படைகள் அமைப்பு

இந்த நிலையில், மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப ரீதியாலான விசாரணையும் தீவிரப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Summary

Murder of a 12th student near Kulathur: 6 special forces formed to catch the culprits

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.