புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஷாப்பிங் மாலில் சீரழிக்கப்பட்ட சிறுமி: சர்வதேச மகளிர் தினத்தன்று இந்தூரில் நடந்த கொடூரம்! 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சர்வதேச மகளிர் தினமான வியாழன் அன்று ஷாப்பிங் மால் ஒன்றில் 9 வயது சிறுமி ஒருத்தி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2018, 12:34 pm

PTI

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சர்வதேச மகளிர் தினமான வியாழன் அன்று ஷாப்பிங் மால் ஒன்றில் 9 வயது சிறுமி ஒருத்தி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அமைந்துள்ளது புகழ் பெற்ற 'ட்ரஷர் ஐலண்ட்'  ஷாப்பிங் மால். இந்த மாலுக்கு வியாழன் அன்று தனது பெற்றோருடன்  9 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். அவர் அங்குள்ள விடியோ கேம் மையத்தில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். 

அப்பொழுது அங்கு பணிபுரியும் அர்ஜுன் ரத்தோர் என்ற இளைஞன் அந்த சிறுமியை அந்த ஷாப்பிங் மாலின் மற்றொரு மூலைக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமி அவளது பெற்றோரிடம் அழுது கொண்டே வந்து சொன்ன பிறகு அவர்களுக்கு விபரம் தெரிய வந்துள்ளது.

உடனடியாக அங்கிருந்த மக்கள் அர்ஜுனை பிடித்து அடித்து உதைத்து, காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அவன் மீது இந்திய தண்டனைப்  பிரிவுச்  சட்டம் 376 மற்றும் 'போஸ்கோ' சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.