ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

வளர்ச்சி பற்றி எங்களுக்கு ஒன்றும் அறிவுரை கூற வேண்டாம்: ஆதித்யநாத்தை கிண்டல் செய்த சித்தராமையா!

வளர்ச்சி பற்றி எங்களுக்கு நீங்கள் ஒன்றும் அறிவுரை கூற வேண்டாம் என்று உத்தப்பிரதேச பாராளுமன்ற இடைத்தேர்தல் தோல்வி குறித்து, அம்மாநில முதல்வர் ஆதித்யநாத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா கிண்டல்.. 

News image
Updated On :15 மார்ச் 2018, 9:19 am

பெங்களூரு: வளர்ச்சி பற்றி எங்களுக்கு நீங்கள் ஒன்றும் அறிவுரை கூற வேண்டாம் என்று உத்தப்பிரதேச பாராளுமன்ற இடைத்தேர்தல் தோல்வி குறித்து, அம்மாநில முதல்வர் ஆதித்யநாத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா கிண்டல் செய்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வராக ஆதித்யநாத்தும், துணை முதல்வராக கேசவ் ப்ரசாத் மவுரியாவும் பதவியேற்றதைத் தொடந்து, முறையே அவர்கள் வகித்து வந்த கோரக்பூர் மற்றும் புல்பூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இந்த தேர்தல் முடிவுகள்  புதனன்று வெளியானது. இந்த இரண்டு தொகுதிகளிலும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் வளர்ச்சி பற்றி எங்களுக்கு நீங்கள் ஒன்றும் அறிவுரை கூற வேண்டாம் என்று உத்தப்பிரதேச பாராளுமன்ற இடைத்தேர்தல் தோல்வி குறித்து, அம்மாநில முதல்வர் ஆதித்யநாத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா கிண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

உத்தரப் பிரதேச முதல்வரும், துணை முதல்வரும் கைவசம் வைத்திருந்த தொகுதிகளில் பாஜக அவமானகரமான தோல்வி அடைந்துள்ளது.

வரலாறு படைத்த வெற்றிக்காக சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு வாழ்த்துக்கள். பாஜக அல்லாத கட்சிகளின் ஒற்றுமை இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இனியாவது வளர்ச்சி பற்றி கர்நாடக அரசுக்கு  அறிவுரை சொல்வதை யோகி ஆதிதிநாத் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த இரண்டு மாதங்களில் பாஜக சார்பாக கர்நாடகாவில் நடந்த நான்கு தேர்தல் பிரசார பேரணிகளில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றுள்ளார். அப்பொழுது அவர் காங்கிரசால் கரநாடகவிற்கு வளர்ச்சியைக் கொண்டு  வர இயலவில்லை; எனவே காங்கிரஸ் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.