ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரம் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு! 

ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு மீது வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கு: கார்த்தி சிதம்பரம் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு! 
Published on
Updated on
1 min read

புதுதில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு மீது வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது 

ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது.   

இந்த வழக்கின் முக்கிய ஆதாரத்தை கார்த்தி சிதம்பரம் அழித்துவிட்டார், ஆதலால் அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம் செய்தது.

அதற்கு வழக்கு ஆதாரங்களை தான் அழித்ததற்கான ஆதாரத்தை சிபிஐ காண்பித்தால், ஜாமின் மனுவை திரும்ப பெற தயார் என கார்த்தி சிதம்பரம் தரப்பும் வாதிட்டது. 

கார்த்தி சிதம்பரத்துக்கு இந்த வழக்கில் ஜாமின் வழங்க சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவரை ஜாமினில் வெளியில் விட்டால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படும் என சிபிஐ தெரிவித்திருந்தது.

இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் வழக்கின் தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com