ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இந்தியாவில் உங்கள் சேவையினை பெறுபவர்கள் யார்? கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தினை நெருக்கும் மத்திய அரசு! 

இந்தியாவிலிருந்து உங்கள் சேவையினை பெறுபவர்கள் யார் என்று கேள்வி எழுப்பி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
Updated On :23 மார்ச் 2018, 4:13 pm

DIN

புதுதில்லி: இந்தியாவிலிருந்து உங்கள் சேவையினை பெறுபவர்கள் யார் என்று கேள்வி எழுப்பி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான 'பேஸ்புக்' பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக, சமீபத்தில் வெளியான தகவல் பெரும் புடலைக் கிளப்பியது.

இந்த செய்தியின் தாக்கமானது தற்பொழுது இந்திய அரசியலிலும் புயலைக் கிளப்பியுள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் தொடர்பு உள்ளது என காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

முன்னதாக இந்தியர்களின் தகவல்கள் விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிய வந்தால், அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து உங்கள் சேவையினை பெறுபவர்கள் யார் என்று கேள்வி எழுப்பி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில் முக்கியமாக 6 கேள்விகளை மத்திய அரசு எழுப்பி உள்ளது.  அதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதாவது:

கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்திய இந்தியர்கள் குறித்த விபரங்களை மார்ச் 31-க்குள் அளிக்க வேண்டும். விபரங்களை அளிக்க தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்

இவ்வாறு அந்த நோட்டீஸில் விபரங்கள் கோரப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.