புது தில்லி: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை, தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிக்கும் முன்னரே ஊடகங்களில் வெளியான விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்து.
பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த அமித் மால்வியா, தனது டிவிட்டர் பக்கத்தில் தேர்தல் தேதியை முன்னதாக அறிவித்ததாகக் குற்றச்சாட்டும் எழுந்தது.
முற்பகல் 11.08 மணிக்கு, தனது டிவிட்டர் பக்கத்தில் அமித் மால்வியா கர்நாடக தேர்தல் தேதியை அறிவித்தார். தேர்தல் ஆணையரோ 11.30 மணிக்குத்தான் தேதியை அறிவித்தார். இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு அமித் மால்வியா தரப்பில் விளக்கக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 11.06 மணிக்கு ஆங்கில செய்தித் தொலைக்காட்சியில் வெளியான செய்தியைப் பார்த்தே தான் டிவீட் செய்ததாகக் கூறி, ஆங்கில செய்தித் தொலைக்காட்சியின் ஸ்க்ரீன் ஷாட்டுகளையும் ஆதாரமாக இணைத்துள்ளார்.
இதற்கிடையே, எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த செய்தியைப் போட்டதாகவும், அது உறுதியான தகவல் இல்லை என்றும் ஆங்கில செய்தித் தொலைக்காட்சித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இப்படி எல்லோருமே நான் அவன் இல்லை என்று சொன்னால், அந்த 'அவன்' யார் என்று எப்படி கண்டுபிடிப்பது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

போலி சான்றிதழ் தயாரித்து அரசுப் பணம் கையாடல்: இருவருக்கு சிறைத் தண்டனை

1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழா் கால பெளத்த, துவாரபாலகா் சிற்பங்கள் கண்டெடுப்பு

பரிக்கல் லட்சுமி நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


