காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஒரு வாரமாகத் தொடர்ந்த உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் அன்னா ஹசாரே! 

விவசாயிகள் பிரச்சினையை தீர்க்கக் கோரி ஒரு வாரமாகத் தான் தொடர்ந்து வந்த உண்ணாவிரதத்தை வியாழன் அன்று அன்னா ஹசாரே  நிறைவு செய்தார்.

News image
Updated On :29 மார்ச் 2018, 12:57 pm

DIN

புதுதில்லி: விவசாயிகள் பிரச்சினையை தீர்க்கக் கோரி ஒரு வாரமாகத் தான் தொடர்ந்து வந்த உண்ணாவிரதத்தை வியாழன் அன்று அன்னா ஹசாரே  நிறைவு செய்தார்.

நாட்டில் விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பதற்காகச் பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன், தில்லி ராம் லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 23-ஆம் தேதி துவங்கினார்.

இந்த தொடர் உண்ணா விரத போராட்டத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 

வியாழனோடு 7-வது நாளாக உண்ணா விரத போராட்டம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் அன்னா ஹசாரேவை, மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் மற்றும் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் ஆகிய இருவரும் சந்திதிப் பேசினார்கள்.

இதனைத் தொடர்ந்து தனது ஒருவார கால உண்ணா விரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அன்னா ஹசாரே தற்பொழுது அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.