மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக தில்லி போலீஸார் மாணவர்கள், பயிற்சி வகுப்பு மையத்தின் ஆசிரியர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணித பாடம் வினாத்தாளும், 12-ம் வகுப்பு பொருளியல் பாடம் வினாத்தாளும் கசித்ததால், அவற்றுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ புதன்கிழமை அறிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தில்லி போலீஸார் தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து, வினாத் தாள் எங்கிருந்து முதலில் கசிந்தது, அது எப்படி பகிரப்பட்டது என்பது குறித்து வியாழக்கிழமை விசாரணையைத் தொடங்கினர்.
முதல்கட்டமாக 18 மாணவர்கள், 5 ஆசிரியர்கள், பயிற்சி வகுப்பு மையத்தின் ஆசிரியர்கள் என 25 பேரிடம் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். இதுகுறித்து தில்லி குற்றப்பிரிவு சிறப்பு ஆணையர் ஆர்.பி. உபாத்யாயா கூறுகையில், 'தேர்வு வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் நடந்துள்ளதாக எங்களிடம் தகவல் இல்லை. அப்படி இருந்தால் தில்லிக்கு வெளியேயும் விசாரணை நடத்தப்படும். இதுவரை 25 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளேம். இவர்களுக்கு தேர்வு நடைபெறுவதற்கு முன்பு வாட்ஸ் ஆப்பில் வினாத்தாள் கிடைக்கப்பெற்றுள்ளது' என்றார்.
இதேபோல் தில்லி ராஜேந்தர் நகரில் உள்ள பயிற்சி வகுப்பு மையத்தின் உரிமையாளரிடமும் தில்லி போலீஸார் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். கணிதம், பொருளியல் ஆகிய பாடங்களுக்கு அவர் வகுப்புகளை எடுத்துள்ளார்.
இந்த முறைகேட்டில் அவர்தான் முக்கிய நபராக கருதப்படுகிறார் என்றும் இந்த முறைகேட்டில் சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக இதுவரை எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
வினாத் தாள் கசிந்த வாட்ஸ் ஆப் செல்லிடப்பேசி எண்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் போலீஸார், தேர்வு மையங்களுக்கு வினாத் தாள் எப்படி அனுப்பப்பட்டது என்பது குறித்தும் சிபிஎஸ்இயிடம் கேட்டுள்ளனர்.
இதனிடையே, சிபிஎஸ்இ தேர்வு எழுதிய மாணவர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் வியாழக்கிழமை கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிபிஎஸ்இயின் அனைத்து பாடங்களின் வினாத்தாள்களும் கசிந்து உள்ளதால், அனைத்து பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை
சிபிஎஸ்இ வினாத் தாள் கசிவு விவகாரத்தில், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வியாழக்கிழமை செய்துள்ள பதிவில், 'எந்தவித தவறும் செய்யாமல் மீண்டும் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு எனது வருத்தமும், மன்னிப்பும் தெரிவித்துகொள்கிறேன். இதற்கு காரணமானவர்கள் மீதும், தவறு செய்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகை செல்வோர் கவனத்துக்கு... இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

மே 5 வரை சென்னை, வேலூரில் கடும் வெப்ப நிலை நிலவும்!

அதிரடியாக உயர்ந்த வர்த்தக சிலிண்டர் விலை: எவ்வளவு?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 8 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


