பெங்களூரு: கர்நாடகா லோக் ஆயுக்தா அலுவலகத்துக்குள் கத்தியினை பைல் ஒன்றுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, நுழைந்த இளம்பெண்னை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநில சட்ட சபை கட்டடமான விதான் சவுதா வளாகத்தில்தான் மாநில லோக் ஆயுக்தா அலுவலகம் உள்ளது. வியாழன் நண்பகல் 12.15 மணி அளவில் 35 வயதுடைய இளம்பெண் ஒருவர் அங்கு கையில் பைல் ஒன்றுடன் வந்துள்ளார். அவரை சோதனை செய்த பெண் போலீஸ் அதிகாரி, அவரது கையில் இருந்த பைலை மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
அப்பொழுது அவருக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக அந்த பைலுக்குள் கத்தி ஒன்று மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விதான் சவுதா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் சோனியா ராணி என்றும், அவரது வழக்கு ஒன்று கர்நாடகா லோக் ஆயுக்தா விசாரணையில் சில மாதங்களாக நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சில மாதங்களுக்கு முன்புதான் கர்நாடகா மாநில லோக் ஆயுக்தா அலுவலகத்துக்குள் புகுந்த ஒருவர் லோக் ஆயுக்தா தலைவரான விஸ்வநாத் ஷெட்டியினை கத்தியால் குத்தினார் என்பதும், ஒரு வாரத்திற்கு முன்புதான் விஸ்வநாத் பணிக்குத் திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அன்று முதல்வனை நிராகரித்த விஜய்... இன்று!

தவெக - காங்கிரஸ் கூட்டணியா? ராகுல் காந்தியின் பதிவு வைரல்!

எதிர்க்கட்சி இல்லாத புதுவை!

பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? ஆட்சிக் கணக்கு!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


