பெங்களூரு: கணினித் தலைநகராக இருந்த பெங்களூருவினை குற்றத் தலைநகராக காங்கிரஸ் மாற்றியுள்ளதாக கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக அவுரத் என்னும் இடத்தில் தனது இரண்டு நாள் சுற்றுப் பயணத்தினை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழன் அன்று துவக்கினார். அதேசமயம் வியாழன் மாலை கென்கேரி எனும் இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
அப்பொழுது கணினித் தலைநகராக இருந்த பெங்களூருவினை குற்றத் தலைநகராக காங்கிரஸ் மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
அந்த கூட்டத்தில் அவர் பேசியாதவது:
காங்கிரஸ் ஊழல் செய்வதில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது. அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றவில்லையெனில் தொடர்ந்து உங்களுக்குப் பிரச்சினைகளைத்தான் கொடுப்பார்கள்.
பெங்களூரு அணி பொதுவாக ஏரிகளுக்குப் பெயர் பெற்றது, ஆனால் தற்போது ஏரிகள் அனைத்தும் 'எரியும் ஏரிகள்' ஆகிவிட்டன. பெல்லந்தூர் ஏரியின் நுரைநச்சுக்கள் சாலையில் பரவும் பொழுது அவை அரசின் திறனின்மையைதான் பேசுகிறது.
ஒரு காலத்தில் பூங்கா நகராக இருந்த பெங்களூரு இன்று குப்பை நகரமாக மாறியுள்ளது. பெங்களூரு நகரத்தின் அடிப்படைத் தேவைகளை இந்த அரசு கண்டுகொள்வதேயில்லை. மாநில இளைஞர்கள் தங்களது முயற்சியினால் இதனை 'ஸ்டார்ட்-அப்' கேப்பிடலாக மாற்றினர், ஆனால் காங்கிரஸ் கட்சியோ இதனை 'ஓட்டைப் பானை' கேப்பிடலாக மாற்றியுள்ளது.
அதேபோல பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் இந்த மாநிலத்தில் குறைவில்லை. கணினித் தலைநகரை காங்கிரஸ் ஆட்சியாளர்கள் குற்றத் தலைநகராக மாற்றியுள்ளனர்
மத்திய அரசின் நிதியினை சித்தராமையா அரசு பயன்படுத்துவதில்லை. தற்பொழுது தொங்கு சட்டசபை என்ற புரளியை காங்கிரசே கிளப்பி வருகிறது. இதன் மூலம் பாஜக பெரும்பான்மையில் வெல்லும் என்பது தெரிய வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

கர்நாடக மேலவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்த பாஜக எம்எல்ஏக்கள்! மாநில தலைவருக்கு நிதின் நபின் சம்மன்!

நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu



