பிகாரில் பேருந்து கவிழ்ந்து தீ பிடித்து பெரும் விபத்து: 27 பேர் பலி 

பிகாரில் பேருந்து கவிழ்ந்து தீ பிடித்து பெரும் விபத்து: 27 பேர் பலி 

பிகாரில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து தடுமாறி கவிழ்ந்து தீ பிடித்த விபத்தில், அதில் பயணம் செய்தவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.  
Published on

பாட்னா: பிகாரில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து தடுமாறி கவிழ்ந்து தீ பிடித்த விபத்தில், அதில் பயணம் செய்தவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.  

பிகார் மாநிலம் மோதிகாரி பகுதியில் வியாழன் அன்று மாலை சாலையில் சென்று கொண்டிருந்த  பேருந்து ஒன்று திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் எதிர்பாரத வகையில் பேருந்து திடீரென தீ பிடித்தது. 

தகவல் கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com