புதுதில்லி: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக, அடுத்த வாரம் தேர்தல் ஆணையமும், மத்திய சட்ட ஆணையமும் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளன
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் 1952-ம் ஆண்டில் மட்டும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு உருவான அரசியல் சூழ்நிலைகள் மற்றும் பல்வேறு காரணங்களால் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது.
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதன் காரணமாக அரசாங்கத்துக்கு அதிக செலவு ஆகிறது. எனவே நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் வாக்குப்பதிவை நடத்தினால் தேர்தல் செலவை பெருமளவில் குறைக்கமுடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
இதனை ஆமோதிக்கும் வகையில் ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்ற யோசனையை பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்து இருந்தார். தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தியாக வேண்டும்.
இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக, அடுத்த வாரம் தேர்தல் ஆணையமும், மத்திய சட்ட ஆணையமும் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளன
இந்த ஆலோசனை தொடர்பான விரிவான அறிக்கை சட்ட குழுவின் மூலம் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கிணற்றில் மிதந்த பெண் சடலம் மீட்பு

சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் - மங்களூரு இடையே ஓணம் சிறப்பு ரயில் இயக்கம்
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
மேலப்பாளையம் அருகே மொபட் திருட்டு: இருவா் கைது
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



