போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

உ.பி.: ரயில் தடம் புரண்டு விபத்து

உத்தரப் பிரதேச மாநிலம் டரியாபந்த் பகுதியில் பயணிகள் விரைவு ரயில் ஒன்று சனிக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. எனினும், இதனால் அசம்பாவிதமோ, பயணிகளுக்கு காயமோ ஏற்படவில்லை.

News image
Updated On :14 மே 2018, 12:12 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் டரியாபந்த் பகுதியில் பயணிகள் விரைவு ரயில் ஒன்று சனிக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. எனினும், இதனால் அசம்பாவிதமோ, பயணிகளுக்கு காயமோ ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது:
பாட்னாவிலிருந்து கோடா வரை செல்லும் விரைவு ரயில், சனிக்கிழமை ஃபைஸாபாத் வழியாக லக்னெü நோக்கி சென்றுகொண்டிருந்தது. டரியாபந்த் அருகே வரும்போது தண்டவாளத்தில் மரம் ஒன்று விழுந்து கிடந்ததை ரயில் ஓட்டுநர் கண்டுள்ளார். விபத்தை தவிர்ப்பதற்காக உடனடியாக அவசரகால நிறுத்தும் வசதியை (எமர்ஜென்சி பிரேக்) அவர் பயன்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக ரயில் தடம் புரண்டதால், பயணிகள் தங்களின் இருக்கைகளில் இருந்து கீழே விழுந்தனர். எனினும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு பாராபங்கி மற்றும் லக்னெüவிலிருந்து மீட்பு ரயில்கள் வரவழைக்கப்பட்டு, தடம்புரண்ட ரயில் மீட்கப்பட்டது. பின்னர் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து சீராகியது என்று காவல்துறையினர் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.