செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஒடிசாவில் இருவேறு இடங்களில் நடந்த என்கவுண்டரில் 6 மவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

ஒடிசாவில் இருவேறு இடங்களில் நடந்த என்கவுண்டரில் 6 மவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

News image
Updated On :14 மே 2018, 3:47 am

ஒடிசாவில் இருவேறு இடங்களில் நடந்த என்கவுண்டரில் 6 மவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் மவோயிஸ்டடுகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து நேற்று அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மவோயிஸ்ட்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் 4 மவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதேபோல் பாலங்கிர் மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு என்கவுண்டரில் 2 மவோயிஸ்ட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்தும் ஆயுதங்கள் மற்றும வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.