காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஒடிசாவில் இருவேறு இடங்களில் நடந்த என்கவுண்டரில் 6 மவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

ஒடிசாவில் இருவேறு இடங்களில் நடந்த என்கவுண்டரில் 6 மவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

News image
Updated On :14 மே 2018, 3:47 am

தினமணி

ஒடிசாவில் இருவேறு இடங்களில் நடந்த என்கவுண்டரில் 6 மவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் மவோயிஸ்டடுகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து நேற்று அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மவோயிஸ்ட்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் 4 மவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதேபோல் பாலங்கிர் மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு என்கவுண்டரில் 2 மவோயிஸ்ட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்தும் ஆயுதங்கள் மற்றும வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.