பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பிகாரில் சாலை விபத்து: 3 ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர்கள் பலி

பிகாரில் நடந்த சாலை விபத்தில் 3 ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.

News image
Updated On :14 மே 2018, 3:26 am

தினமணி

பிகாரில் நடந்த சாலை விபத்தில் 3 ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ்பிரதாப் யாதவுக்கும், பிகார் எம்எல்ஏ சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது. 

பிகார் தலைநகர் பாட்னாவில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண விழாவில், அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் குடும்ப சகிதமாக கலந்துகொண்டனர். 

இத்திருமண நிகழ்சசியில் பங்கேற்ற ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் காரில் நேற்று கிஷன்கன்ஞ் பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற கார் ஆராரியா மாவட்டத்தில் வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.