சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி கண்டரரூ மகேஷ்வரரூ (91) வயோதிகம் காரணமாக திங்கள்கிழமை காலமானார். அவருக்கு மனைவி, மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.
சபரிமலை கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கான அதிகாரம் கொண்ட தழமொன் குடும்பத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரரூ என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலம், செங்கன்னூரைச் சேர்ந்த அவர், சிறு வயது முதலே சபரிமலை கோயிலில் தந்திரியாக இருந்து வந்தார்.
சபரிமலையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலுக்கும் 2006- ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தந்திரியாக இருந்துள்ளார்.
சில காலமாகவே மகேஷ்வரரூ உடல் நலிவுற்று ஓய்வில் இருந்தார். இந்தச் சூழலில், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகேஷ்வரரூ, திங்கள்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் செங்கன்னூரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை: கடும் போட்டியில் திமுக, பாஜக!
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 போ் கைது

திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

