குஜராத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது நாட்டுப்புறப் பாடகருக்கு ரூ.50 லட்சம் பண மழையில் நனைந்தார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள வலசாத் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள கல்வாடா கிராமத்தில் தங்களின் அடிப்படை தேவைக்காக நாட்டுப்புறப் பாடகரை கிராம மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
அந்த கிராமத்துக்கென ஆம்புலன்ஸ் வாங்குவதற்காக கிராமத் தலைவர் ஆஷிஷ் படேல், ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து அதன்மூலம் ஜலராம் மானவ் சேவா டிரஸ்ட்டுக்கு நிதி திரட்ட வழி செய்தார். அவ்வகையில் அங்கு புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகரின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தனர்.
இதில் அந்த பாடகர் மீது பண மழை பொழிந்தது. ரூ.50 லட்சம் வரை வசூலானதாக இந்த விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.