புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஆபாச விடியோக்கள்: கூகுள், முகநூலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்

வலைதளங்களில் இருக்கும் ஆபாச விடியோக்களை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் தாக்கல் செய்யாத காரணத்தினால், கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களுக்கு உச்ச நீதிமன்றம்

News image
Updated On :21 மே 2018, 8:23 pm

வலைதளங்களில் இருக்கும் ஆபாச விடியோக்களை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் தாக்கல் செய்யாத காரணத்தினால், கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மதன் பி லோகுர், யு.யு. லலித் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தால் முன்பு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, ஆபாச விடியோக்களை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சமூகவலைதளங்கள் பதில் தாக்கல் செய்யாததை கண்டு நீதிபதிகள் அதிருப்தியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், "கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், யாகூ, முகநூல் அயர்லாந்து, முகநூல் இந்தியா, கூகுள் இந்தியா, கூகுள், மைக்ரோசாப்ட், வாட்ஸ் அப் ஆகியவை, ஆபாச விடியோக்களைமுடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த நிறுவனங்கள் பதில் தாக்கல் செய்யவில்லை' என்றனர்.
அப்போது மத்திய அரசு தரப்பில், இணையதள கணினி குற்றம் குறித்து தகவல் தெரிவிக்க தனியாக இணையதளம் தொடங்கப்படவுள்ளதாகவும், ஜூலை 15-ஆம் தேதிக்கு முன்பு அந்த வலைதளம் ஆரம்பிக்கப்பட்டு விடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்டுவிட்டு நீதிபதிகள் கூறுகையில், "ஜூலை 15-ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளிக்க முடியாது. ஜூன் 30-ஆம் தேதிக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு முடித்துக் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பதில் தாக்கல் செய்யாத, யாகூ, முகநூல் அயர்லாந்து, முகநூல் இந்தியா, கூகுள் இந்தியா, கூகுள், மைக்ரோசாப்ட், வாட்ஸ் அப் ஆகியவற்றுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் அந்த வலைதளங்கள், ஜூன் 15-ஆம் தேதிக்கு முன்பு பதில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.