ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், பெண் உள்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆர்னியா செக்டாரில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் திங்கள்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர். அவர்களின் தாக்குதலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து ஆர்னியா காவல் நிலையம், சந்தைப் பகுதி ஆகிய இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் பீரங்கி குண்டுகளை வீசினர்.
இதனால், பீதியடைந்த பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளயேறி, வேறு இடங்களுக்குச் சென்றனர். அவர்களின் தாக்குலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.
எனினும், இந்த மோதலில், ஆர்னியாவைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு காவல் துறை சிறப்பு அதிகாரி உள்பட 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பாகிஸ்தான் படையினரின் தாக்குதல் காரணமாக, ஆர்னியாவில் சர்வதேச எல்லையில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் உள்ள பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன.
போலீஸ் நிலைகள் மீது தாக்குதல்: இதனிடையே, புல்வாமா மாவட்டத்தில் போலீஸ் நிலைகள் மீது தீவிரவாதிகள் திங்கள்கிழமை காலை தாக்குதல் நடத்தினர். போலீஸார் உரிய பதிலடி கொடுத்ததால், அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
போலீஸாரிடம் உள்ள ஆயுதங்களைப் பறிக்கும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகரில் கட்டுப்பாடு: இதனிடையே, மறைந்த பிரிவினைவாதத் தலைவர்கள் மீர்வாய்ஸ் முகமது ஃபாரூக், அப்துல் கனி லோன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, திங்கள்கிழமை பொதுக் கூட்டம் நடத்துவதற்கு பிரிவினைவாத அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன் காரணமாக, சஃபாகடல், ரைனவாரி, நெüஹட்டா, எம்.ஆர்.குங், கன்யார் ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாமரரையும் பட்டணத்தில் உள்ளோரையும் இணைக்கும் உன்னத விழா: ஆளுநர்

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்: எல்.முருகன்

பேரணாம்பட்டு பகுதியில் கனமழை: மின்னல் பாய்ந்து சிறுவன் பலி

வார பலன்கள் (மே 1 - 7) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


