பேரணாம்பட்டு அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் மின்னல் பாய்ந்து சிறுவன் பலியான நிகழ்வு அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை பேரணாம்பட்டு நகர சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த நிலையில், பேரணாம்பட்டு அடுத்த சொக்கரிசிகுப்பத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் வைரமுத்து(14) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து. அந்த சமயம் மின்னல் பாய்ந்ததில், வைரமுத்து சம்பவ இடத்திலே பலியானார்.
உடனடியாக அங்கிருந்த உறவினர்கள் அவரை மீட்டு மேல்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் மின்னல் பாய்ந்ததில் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மேல்பட்டி போலீசார் சிறுவனின் உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டின் அருகே நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மின்னல் பாய்ந்து பலியான சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Summary
Heavy rain in Peranampattu area: Boy dies after being struck by lightning
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள்,மக்கள் மகிழ்ச்சி!

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு



