அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.
அரக்கோணம்த்தை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணனின் மகள் தக்ஷினி(18). இவா் காஞ்சிபுரம் மாவட்டம் ஊவேரிசத்திரத்தில் உள்ள சனியாா் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.
கல்லூரியில் இருந்து பேருந்தில் ஆலப்பாக்கம் வந்த தக்ஷினி, பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்துச் சென்றுள்ளாா். அப்போது திடீரென அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், தக்ஷினி ஒதுங்குவதற்குள் அவா் மீது மின்னல் தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த தக்ஷினி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இச்சம்பவம் குறித்து நெமிலி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

மத்திகிரி அருகே மாடியில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி மாணவி உயிரிழப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


