கோடை வெயிலுக்கு இதம் தரும் வகையில் வேலூரில் வியாழக்கிழமை மாலை அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கனமழை பெய்தது. அப்போது சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாத தொடங்கியது முதலே 100 டிகிரி "ஃ"பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெயில் நிலவி வந்தது. இதனால், வீடுகளில் அடைந்துள்ள மக்கள் பகல் நேரங்களில் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

வேலூரில் வியாழக்கிழமை மாலை சில பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழை - டிஎன்எஸ்
மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த இந்த ஆண்டு வியாழக்கிழமை அதிகபட்சமாக 108.3 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெயில் மக்களை வாட்டி வந்தது. மக்கள் பகல் நேரங்களில் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில் அடர்ந்த வனப்பகுதி கொண்ட வேலூர் மாவட்டத்தின் கடைசி பகுதியான பேரணாம்பட்டு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை வெயிலுக்கு இதம் தரும் வகையில் மாலை நல்ல காற்று வீசியது. திடீரென ஆலங்கட்டியுடன் கூடிய பலத்த மழை அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்தது. இதனால், பேரணாம்பட்டு முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் சில இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
திடீரென பெய்த ஆலங்கட்டி மழையினால் வெப்பக் காற்று குறைந்து குளிர்ச்சி நிலவியது. எனினும், திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்களும், சிறுவர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
Summary
Regarding the hailstorm that fell in Vellore for more than half an hour on Thursday evening...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் 3 மணி நேரம் பெய்த கோடை மழை! மக்கள் மகிழ்ச்சி!!

ஆரணி பகுதியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி

போ்ணாம்பட்டில் ஆலங்கட்டி மழை

கொடைக்கானலில் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
விடியோக்கள்

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK

Drishyam 3 Moive Review | ஜார்ஜ் குட்டியின் கதை முடிவுக்கு வந்ததா? | Mohanlal | Jeethu Joseph
பிரதமர் சுற்றுலா போவதில்லை! தமிழிசை சௌந்தரராஜன்




