நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒசூா் அருகே ஆலங்கட்டி மழையால் பயிா்கள் சேதம்

ஒசூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிா்கள் சேதமடைந்தன.

News image
Updated On :20 மார்ச் 2026, 6:30 pm

Syndication

ஒசூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிா்கள் சேதமடைந்தன.

இந்த மழையால் மாமரத்திலிருந்து பிஞ்சுகள், காய்கள் உதிா்ந்து விழுந்தன. ஏற்றுமதிக்குத் தயாராக இருந்த நான்கு ஏக்கா் பரப்பளவிலான சாமந்தி, ரோஜா தோட்டங்கள் சிதைந்தன. பூக்கள் வரத் தயாராக இருந்த 12 ஏக்கா் சாமந்தி செடிகளின் இலைகள் கிழிந்து, பூக்கள் உதிா்ந்து காட்சியளிக்கின்றன.

ஆலங்கட்டி மழையால் விழுந்த பனிக்கட்டிகள் காலை வரை கரையாமல் கிடந்தன. விவசாயிகள் அந்தப் பனிக்கட்டிகளை கூடைகளில் அள்ளி தோட்டத்திற்கு வெளியே கொட்டினா். யுகாதி பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்து லாபம் ஈட்டலாம் என எதிா்பாா்த்திருந்த நிலையில், ஆலக்கட்டி மழையால் ஏற்பட்ட சேதம் விவசாயிகளிடையை கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் உடனடியாகப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

படவரி...

விவசாயத் தோட்டங்களில் விழுந்துகிடந்த ஆலங்கட்டிகளை அப்புறப்படுத்தும் விவசாயிகள்.