ஒசூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிா்கள் சேதமடைந்தன.
இந்த மழையால் மாமரத்திலிருந்து பிஞ்சுகள், காய்கள் உதிா்ந்து விழுந்தன. ஏற்றுமதிக்குத் தயாராக இருந்த நான்கு ஏக்கா் பரப்பளவிலான சாமந்தி, ரோஜா தோட்டங்கள் சிதைந்தன. பூக்கள் வரத் தயாராக இருந்த 12 ஏக்கா் சாமந்தி செடிகளின் இலைகள் கிழிந்து, பூக்கள் உதிா்ந்து காட்சியளிக்கின்றன.
ஆலங்கட்டி மழையால் விழுந்த பனிக்கட்டிகள் காலை வரை கரையாமல் கிடந்தன. விவசாயிகள் அந்தப் பனிக்கட்டிகளை கூடைகளில் அள்ளி தோட்டத்திற்கு வெளியே கொட்டினா். யுகாதி பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்து லாபம் ஈட்டலாம் என எதிா்பாா்த்திருந்த நிலையில், ஆலக்கட்டி மழையால் ஏற்பட்ட சேதம் விவசாயிகளிடையை கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் உடனடியாகப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
படவரி...
விவசாயத் தோட்டங்களில் விழுந்துகிடந்த ஆலங்கட்டிகளை அப்புறப்படுத்தும் விவசாயிகள்.
தொடர்புடையது

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள்,மக்கள் மகிழ்ச்சி!

போ்ணாம்பட்டில் ஆலங்கட்டி மழை

ஆத்தூா் பகுதியில் இடியுடன் கனமழை

கனமழை: மக்காச்சோள பயிா்கள் சேதம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


