மத்திய அரசு 4 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து அதன் சாதனைகள் அடங்கிய புத்தகம் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அமைச்சர்கள் வி.கே.சிங் மற்றும் எம்.ஜே.அக்பர் ஆகியோர் புதுதில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:
டோக்லாம் விவகாரத்தில் இரு தரப்பிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தற்போதைய நிலை அப்படியே தொடர்கிறது. பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என நாங்கள் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் அதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது.
பயங்கரவாதமும், அமைதிப் பேச்சுவார்த்தையும் ஒருசேர நடைபெறாது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களால் நமது நாட்டின் ராணுவ வீரர்கள் கொல்லப்படுகின்றனர். அவ்வாறு இருக்கையில் அமைதிப் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமுள்ளதாக இருக்காது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! எம்பிக்களின் கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


