அசுத்தமான நீரை குடிக்கும் அவலம் - பொதுமக்கள் வேதனை

கடுமையான தண்ணீர் வறட்சியால் சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்கள் அசுத்தமான நீரை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அசுத்தமான நீரை குடிக்கும் அவலம் - பொதுமக்கள் வேதனை
Published on
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜீரம் எனும் கிராமத்தில் கடுமையான தண்ணீர் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதனால், அந்த கிராம மக்கள் அசுத்தமான தண்ணீரையை தங்களது தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டிய அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அந்த கிராம மக்கள் தண்ணீர் வேண்டும் என்றால் கடும் வெயிலில் 2 மைல் தூரம் சென்று தான் தண்ணீரை பெற வேண்டும். இதுகுறித்து அந்த கிராமவாசி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில்,

"இங்கு அரசால் கட்டப்பட்ட கழிப்பறைகள் உள்ளன. ஆனால், அதனை பயன்படுத்துவதற்கு அங்கு தண்ணீர் இல்லை. இங்கு, அடிப்படை வசதிகளான தண்ணீர், கல்வி மற்றும் மின்சாரம் என அனைத்திலுமே குறைபாடுகள் உள்ளன" என்றார்.  

இந்த மாநிலத்தில் மற்ற பல இடங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதனால், அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com