மத்தியப் பிரதேச மாநிலம், பர்வானி மாவட்டத்தின் ராஜ்புர் தொகுதி பாஜக வேட்பாளரும், மாநில முன்னாள் அமைச்சருமான தேவிசிங் படேல்(66) மாரடைப்பால் திங்கள்கிழமை மரணமடைந்தார்.
இது குறித்து, மாநில பாஜக நிர்வாக உறுப்பினரும், படேலின் நெருங்கிய நண்பருமான ஓம் சோனி கூறியதாவது:
சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தேவிசிங் படேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், திங்கள்கிழமை காலை மீண்டும் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று அவர் தெரிவித்தார். படேல், முன்னாள் முதல்வர் உமா பாரதி தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.
கடந்த 1990-ஆம் ஆண்டு, முதன் முதலாகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படேல், பின்னர் 1998, 2003, 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில், ராஜ்புர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பாலா பச்சனிடம் தோல்வியடைந்தார்.
வரும் 28-ஆம் தேதி, மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், ராஜ்புர் தொகுதியில் படேல் மீண்டும் போட்டியிடுவார் என்று கடந்த 2-ஆம் தேதி பாஜக அறிவித்திருந்தது. இந்நிலையில், எதிர்பாராத வகையில் அவர் மரணமடைந்திருப்பது மாநில பாஜக நிர்வாகிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான பந்தர்கச் பகுதியில் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்!

நீர் அருந்துவதால் இவ்வளவு பலன்களா?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் பாடல் அப்டேட்!

போதைக் கொடுமையால் நிகழும் கொடூர குற்றங்களை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


