ஆந்திர மாநிலத்துக்கான தனி உயர் நீதிமன்றம் அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் இரண்டாக பிரியும் வரை உயர் நீதிமன்றம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வந்தது. 2014-ஆம் ஆண்டில் இரு மாநிலங்களும் பிரியும் போது ஹைதராபாத் தெலங்கானா மாநிலத்துடன் இணைந்தது. இதையடுத்து, ஆந்திர மாநிலத்துக்கு தனி உயர் நீதிமன்றத்தை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
தனி உயர் நீதிமன்றத்தின் கட்டட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அது செயல்பாட்டுக்கு வரும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ கே சிக்ரி மற்றும் அஷோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது, "இதற்கான அறிவிப்பு ஜனவரி 1, 2019 வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதன்மூலம், இரண்டு உயர் நீதிமன்றங்களும் தனித்தனியாக செயல்படலாம். ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் புதிய கட்டடத்தில் விரைவில் செயல்படலாம்" என்று தெரிவித்தனர்.
ஆந்திராவில் கட்டமைக்கப்பட்டு அதன் தலைநகரமான அமராவதியில் இந்த நீதிமன்றம் அமையவுள்ளது. இதன்மூலம், நாட்டின் 25-ஆவது உயர் நீதிமன்றம் என்ற பெருமை ஆந்திர உயர் நீதிமன்றத்துக்கு கிடைக்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தாவின் 4 புதிய நிறுவனங்கள்!

இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!

சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK



